"அடுமனை பொருட்கள் தயாரிப்பு" பயிற்சி வகுப்புகள் 5-ம் தேதி தொடக்கம்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் சார்பில் விவசாயம், உணவு போன்றவைகள் தொடர்பாக பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இரண்டு நாட்கள் நடக்கும் "அடுமனை பொருட்கள் தயாரிப்பு" (“Novel Bakery products”) பயிற்சி வகுப்புகள் வரும் 5 மற்றும் 6-ம் தேதிகளில் நடக்கிறது. 

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இந்த பயிற்சி வகுப்பில், பல்வேறு வகையான ரொட்டிகள், கேக்குகள் மற்றும் பிஸ்கட்டுகள் செய்வது குறித்து கற்றுத் தரப்பட இருக்கிறது.

விருப்பமுள்ளவர்கள் பயிற்சி வகுப்பு தொடங்கும் முந்தைய நாளுக்குள் ரூ.1,500 செலுத்த வேண்டும்.

மேலும், விபரங்களுக்கு தொடர்பு கொள்ள:-

ஆசிரியர் மற்றும் தலைவர்,

பின் அறுவடை தொழில்நுட்ப மையம்,

வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்,

கோவை - 641003

தொலைபேசி - 0422 - 6611268 / 6611340.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....